Wednesday, March 26, 2014

இந்தப் பாட்டை, அரங்கனின் அரையர் ஸ்ரீராம பாரதி அவர்கள், மிக உருக்கமாகப் பாடுவார்கள்!



மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே, தாலேலோ
வையம் அளந்தானே, தாலேலோ (1)

உடையார் கன மணியோடு ஒண் மாதுளம்பூ
இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறு கபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ
உலகம் அளந்தானே, தாலேலோ (2)

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ
தேவகி சிங்கமே தாலேலோ (4)

இந்தப் பாட்டை, அரங்கனின் அரையர் ஸ்ரீராம பாரதி அவர்கள், மிக உருக்கமாகப் பாடுவார்கள்!


Thanks to Indra Srinivasan for sharing this.

0 comments:

Post a Comment