Monday, December 16, 2013

Thirukkannamangai Sri Bakthavathsala Perumal, Thiru Adhyayana Uthsavam‏

இத்துடன் இணைத்திருக்கும் பத்திரிகையின்படி எதிர்வரும் 01.01.2014 முதல் 10.01.2014 வரை பகல் பத்து உத்ஸவமும் 11.01.2014 முதல் 20.01.2014 வரை இராப்பத்து உத்ஸவமும் விமரிசையாக நடக்க உள்ளது.

பகல் பத்து உத்ஸவத்தில் தினசரி காலை திருமஞ்சனம், சேவாகாலம் சாற்றுமுறையும், மாலை 5 மணிக்கு உள் ப்ரகாரம் எனப்படும் இரண்டாவது ப்ரகாரத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.

9ம் உத்ஸவத்தன்று "பெரியாண்டான்" சிறப்பு எனப்படும் மூலவர் திருவடி திருமஞ்சனமும் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதலும்  நடைபெறும்.

10.01.2014 அன்று " மோஹினி அலங்காரப் புறப்பாடு" நடைபெறும்.

11.01.2014 அதிகாலை 5 மணிக்கு "(வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு)சொர்க்க வாசல்" திறப்பு நடைபெறும். சொர்க்க வாசல் திறந்து பெருமாள் "செண்பகப் ப்ரகாரம்" எனப்படும் 3 வது ப்ரகாரத்தில் பெருமாள் எழுந்தருளுவார்.

12.01.2014 - 20.01.2014 வரை தினசரி இரவு 7 மணிக்கு பெருமாள் " சொர்க்க வாசல் " வழியாக 3வது ப்ரகாரத்தில் புறப்பாடாகி எழுந்தருளுவார்.
 
20.01.2014 இராப்பத்து சாற்றுமுறை அன்று  நம்மாழ்வார் திருவடி தொழுதல் நடந்து சாற்றுமுறை ஆனதும் பெருமாள் உள் ப்ரகாரத்தி ஏளி "சொர்க்கவாசல்" சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று உத்ஸவம் பூர்த்தி ஆகும்.
--

Dr.T.S.R.RAJAGOPALAN, (Raja),





 

0 comments:

Post a Comment