Friday, February 28, 2014

கைகேயி!!!



கைகேயி பிறந்த கதை: கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்;

ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்! துருபதன் மகள் திரௌபதி. ஜனகன் மகள் ஜானகி. பாஞ்சாலன் மகள் பாஞ்சாலி என்பதைப் போல, கேகய மன்னன் மகள் என்பதால் கைகேயி என்று பெயரே தவிர, கைகேயிக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுவல்ல.

கேகய தேசத்தின் மன்னர் அச்வபதி. தலைசிறந்த தர்மவான். எல்லாக் கலைகளிலும் மிகுந்த அனுபவசாலி. வைச்வானர என்பது வித்தைகளில் மிகவும் தேர்ந்த வித்தை.

அதில் அவர் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் சரஸ்வதி தேவியை உபாசிக்கும் பக்தர். ஒரு நாள் பூஜையை முடித்து எழுந்தார் மன்னர் அச்வபதி. எதிர்பாராத விதமாகக் கையில் வீணையுடன் பால வடிவத்தில் சரஸ்வதிதேவி தரிசனம் தந்தாள்.

ஆனந்தத்தின் எல்லையை அடைந்த மன்னர், அம்பிகையை வலம் வந்து துதித்தார். தன் உள்ளத்தில் இருந்ததை வெளிப்படுத்தினார். அம்மா! உனக்குச் சமமான குழந்தையை எனக்குத் தந்தருள வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்! என வேண்டினார்.

சிரித்தாள் சரஸ்வதி. எனக்குச் சமமாகவா.. சரிதான்! நானேதான் உனக்குப் பெண்ணாக அவதரிக்க வேண்டும். நீ ஒன்று செய். ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று ஸாரஸ்வத இஷ்டீ என்ற யாகம் செய்.

நான் அந்த யாகத் தீயில் தோன்றி, உனது வீட்டில் உன் குழந்தையாகவே வளர்வேன்! என்று சொல்லிவிட்டு மறைந்தாள் சரஸ்வதி. ஐப்பசி மாத பவுர்ணமியில் சரஸ்வதி சொன்ன ஸாரஸ்வத இஷ்டீ யாகத்தை முறைப்படி செய்தார் அச்வபதி.

கௌதம முனிவர், முனிவர்களுக்குத் தலைவராக இருந்து யாகத்தை நடத்தினார். மாலை நேரம். யாக அக்னியில் இருந்து சரஸ்வதிதேவி வெளிப்பட்டாள்.

தங்க மயமான பாத்திரத்தில் நிறைந்திருந்த அவிர்பாகத்தை (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) சுட்டிக் காட்டியபடி, அச்வபதி மன்னா! உனது அபரிமிதமான அன்பின் காரணமாக இந்த அவிர்பாகம் மிகவும் இனிமையாக உள்ளது.

இதை நான் மட்டும் ஏற்றால் சரியாகாது. இதோ, இங்குள்ள தேவர்கள் அனைவருக்கும் இந்த அவிர்பாகத்தைப் பங்கிட்டுக் கொடு! அப்போதுதான் எனக்கு திருப்தி உண்டாகும்! என்றாள்.

அவிர்பாகம் அங்கிருந்த தேவர்களுக்கெல்லாம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. தங்களுக்குக் கிடைத்த அவிர்பாகத்தை (சாதத்தை) சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்தார்கள் தேவர்கள்.

இது ஏன்? சிவபெருமானுக்கு அவிர்பாகம் தராமல் அவரை விலக்கிவிட்டு யாகம் செய்த தட்சனும், அதில் கலந்து கொண்ட தேவர்களும் அவமானப்பட்டு, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நேரம் அது.

எனவே, தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பாவம் தீர்வதற்கு அச்வபதி மன்னர் தங்களுக்குத் தந்த அவிர்பாகத்தை சிவபெருமானுக்குச் சமர்ப்பித்தார்கள்.

ஐப்பசி மாதத்தில் சிவ பெருமானுக்கு நாம் செய்யும் அன்னாபிஷேகத்துக்கு இதுவே மூலாதாரமாக அமைந்துள்ளது. யாகத்தில் அச்வபதி மன்னருக்கு தரிசனம் தந்த தேவி, அவரது பிரார்த்தனைக்கு இணங்கி ஒரு மானிடப் பெண்ணாக, கேகய ராஜனான அச்வபதிக்கு மகளாக அவரிடம் வந்தாள்.

இவளே கைகேயி. இவளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சரஸ்வதி. நாளடைவில், தன் தந்தை பார்த்து வந்த வேலையை தானே பார்க்க ஆரம்பித்தாள் சரஸ்வதி.

அது என்ன வேலை? அச்வபதி மன்னர் வேதத்திலும் கலைகளிலும் மிகுந்த திறமைசாலி என்பதால், போன ஜென்மத்தின் பலாபலன்களைக் கண்டறியும் சக்தி அவருக்கு உண்டு.

பிரச்னை என்று தன்னை நாடி வருபவர்களுக்கு, அவரவர் பூர்வ ஜென்மத்தையும், அதனால் ஏற்படும் சுக துக்கங்களையும் உணர்ந்து இன்னது செய்யலாம், இன்னது செய்யக் கூடாது என்று சொல்லி நல்வழி காட்டுவார்.

இதுதான் வைச்வானர வித்தை. அதனால் அரசர்கள் பலர் வந்து தங்கள் அல்லல்களைத் தீர்த்துக் கொண்டு போவார்கள்.

இந்த வேலையைத்தான் சரஸ்வதியும் செய்ய ஆரம்பித்தாள். அடுத்தவர் குறை தீர்க்கும் பணியை சரஸ்வதி செய்யட்டும்.

அவளைத் தேடி அயோத்தி மன்னர் வரப் போகிறார். நாம் அவரிடம் போகலாம். அயோத்தி மன்னர் தசரதருக்குக் குழந்தை இல்லை, ம்...! இதற்கு என்ன செய்யலாம்? சரி! நாமும் கேகய மன்னர் அச்வபதியிடம் போய் வழி கேட்க வேண்டியதுதான்! என்று தீர்மானித்த தசரதர், கேகய நாட்டுக்குக் கிளம்பினார்.

தசரதரை வரவேற்றாள் சரஸ்வதி. மன்னா! என்ன காரியமாக வந்தீர்கள்? என்றாள். பெண்ணே! மழலைச் செல்வம் இல்லாத மனக்குறைதான் எனக்கு. அதற்காக அச்வபதியைப் பார்க்க வந்தேன் என்றார் தசரதர்.

சரஸ்வதி வழி சொன்னாள். அதில் தசரதரின் பூர்வ ஜென்ம வரலாறே இருந்தது. தசரதர் திகைத்தார்.

மன்னா! போன பிறவியில் நீங்கள், உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானாக இருந்தீர்கள். காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என மூன்று மனைவிகள் இருந்தார்கள். நீங்கள் இந்தப் பிறவியில் தசரதராகப் பிறந்திருக்கிறீர்கள்.

உங்கள் மூன்று மனைவியரும் இந்தப் பிறவியிலும் உங்களை மணந்து கொள்வதற்காக அரசிகளாகப் பிறந்திருக்கிறார்கள். அதில் காயத்ரிதான் உங்கள் முதல் மனைவி கௌசல்யாதேவி.

சாவித்ரி. சுமித்ராதேவி. நான் சரஸ்வதி. நீங்கள் என்னையும் மணம் செய்து கொண்டால், உங்கள் தோஷங்கள் நீங்கும். மேலும், சாட்சாத் மஹாவிஷ்ணுவே உங்கள் பரம்பரை பூஜா விக்கிரமாக ஸ்ரீரங்கநாதர் என்ற பெயரில் விளங்கி வருகிறார்.

அவரை பூஜை செய்யுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். திருமணம் குறித்து என் தந்தையிடம் பேசுங்கள்! என்றாள்.

மனக் கவலை தீர மருந்தைத் தெரிந்து கொண்ட தசரதர், அச்வபதி மன்னரைச் சந்தித்தார். நடந்ததை விவரித்தார். அச்வபதியும் ஒப்புக் கொண்டார். சரஸ்வதிக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தது. இந்த சரஸ்வதி, கேகய இளவரசி என்பதால் கைகேயி என அழைக்கப்பட்டாள்.

கைகேயியின் உயர்ந்த உள்ளம்!

தசரதனின் மூன்று மனைவியரில் இளையவள், கைகேயி. அழகே உருவானவள். வீரமும் விவேகமும் கொண்டவள். தன் அன்பாலும் பாசத்தாலும் தசரதன் உள்ளத்தில் மட்டும் அல்லாமல், அனைவரின் உள்ளத்திலும் இடம்பெற்றவள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தன் மகன் பரதனிடத்தில் காட்டும் அன்பையும், பரிவையும்விட, ராமனிடம் அவள் அதிக அளவு அன்பும் பாசமும் கொண்டிருப்பதை நினைத்துப் பெரிதும் மகிழ்ந்தான் தசரதன். ஆகவே, அவளிடம் அதிக மதிப்பு வைத்திருந்தான் தசரதன்.

இத்தனை உண்மைகளுக்கு நடுவில், ஒரே இரவில் அவள் மனம் மாறி, ராமனுக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்றும், 14 வருடங்கள் ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள் கைகேயி.

ராமனுக்கு மட்டுமின்றி, தன் மகன் பரதனுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு கொடிய செயலை கைகேயி செய்திருப்பாளா என நினைத்துப் பார்த்தால், அதை மனம் ஏற்கவில்லை.

மந்தரை என்றொரு கூனி. கைகேயியின் தாதியாக இருந்தவள். அவளிடம் அரை மணி நேரம் பேசியதன் விளைவு... விவேகம் மிக்க கைகேயி மனம் மாறி, ராமனைக் காட்டுக்கு அனுப்ப விரும்பினாள் என்பது உண்மையானால், அவளது கதாபாத்திரத்தின் உயர்வே அழிந்துவிடும்

ஏதோ பேராசையின் காரணமாகத் தன் மகனுக்கு அரசு பதவி தேடித் தரவேண்டும் என்று விரும்பி, அதன் பொருட்டு, கைகேயி தசரதனிடம் வரம் கேட்டிருக்கலாம்;

வாதாடி பரதனுக்கு முடிசூட்ட நினைத்திருக்கலாம் என்பதையாவது ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளலாம். ஆனால், பிரியத்துக்குகந்த ராமனைக் காட்டுக்கு அனுப்பும்படி சொல்ல, அந்தத் தாய்க்கு எப்படி மனம் வந்திருக்கும்?

கைகேயி எத்தகையவள் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. சம்பராசுரன் என்ற அசுரனுடன் தசரதன் ஒருமுறை போர் புரிந்தான். அப்போது, அவனுடைய தேருக்குச் சாரதியாக இருந்தாள் வீராங்கனை கைகேயி.

தேரின் அச்சு முறிந்த நிலையில், தன் விரலையே அச்சாணியாகக் கொடுத்து, தன்னுயிரைப் பணயம் வைத்து, தசரதன் உயிரைக் காத்தாள்.

கைகேயி ரதத்தின் கடையாணிக்கு தன் விரலை எப்படி பயன்படுத்தினாள் என்பது தெரியுமா?

ரதத்தின் கடையாணிக்கு பதிலாக, ஆள்காட்டி விரலை கடையாணியாக பயன்படுத்த ¬முடியுமா என்றால், ¬முடியும். ஏனெனில், அந்த விரல் மட்டும் இரும்பு விரலாக இருந்தது.

ஒரு சமயம், தசரதரின் அரண்மனையில் துர்வாசர் தங்கியிருந்த போது, அவருக்கு பணி விடை செய்தாள் கைகேயி. துர்வாசருக்கு அடிக்கடி கோபம் வரும்; சாபம் கொடுத்து விடுவார்.

துர்வாசர் இப்படி கோபம் கொண்டு சாபம் கொடுப்பது வழக்கம். அவருக்கு ஒரு வரம் இருந்தது. அவர் சாபமிட்டால் அவரது தவம் கூடுதலாகுமாம். அதனால், அவர் எப்போதுமே யாரையாவது சாபமிடுவது வழக்கம்.

தசரதருடைய அரண்மனையில் துர்வாசர் தங்கிவிட்டுப் போகும் போது, பக்கத்திலுள்ள தோழிகளிடம், அதோ போகிறாரே, அவர்தான் துர்வாசர்... என்று, தன் ஆள்காட்டி விரலால் காண்பித்தாள் கைகேயி.

இதை பார்த்த துர்வாசர், அந்த ஆள் காட்டி விரல் இரும்பாகப் போகட்டும்... என்று சாபம் கொடுத்தார். கைகேயின் ஆள்காட்டி விரல் மட்டும் இரும்பாக மாறியது.

ஆனால், அதுவே நன்மையாக ¬முடிந்தது. தசரதரின் ரதத்திலிருந்த கடையாணி ஒடிந்த போது, தன் ஆள்காட்டி விரலையே கடையாணியாக பயன்படுத்தி ரதத்தை ஓட்டினாள் கைகேயி.

அவளின் பதிபக்தி மற்றும் தியாகத்தில் சிலிர்த்த தசரதன், இரண்டு வரங்களை அவளுக்கு அளித்தான். பேராசைக்காரியாக அவள் இருந்திருந்தால்... தானே பட்ட மகிஷியாக வேண்டும் என்றும், தனக்குப் பிறக்கும் குழந்தைக்கே முடிசூட்ட வேண்டும் என்றும் அப்போதே வரம் கேட்டிருக்கலாம்.

ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. கணவனுக்குச் செய்த சேவை, தன் கடமைதானே என்று உணர்ந்து, வரங்கள் இப்போது வேண்டாம். தேவைப்பட்டால் பின்பு எப்போதாவது கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன் என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டாள். அப்படிப்பட்டவளா இந்தக் கொடிய வரங்களைக் கேட்டிருப்பாள்?

ஆராய்ந்து பார்த்தால், இதற்கு ஏதோவொரு மூல காரணம் இருந்திருக்க வேண்டும், அதற்குப் பின்னே எவரும் அறியாத சம்பவங்கள் சில புதைந்து கிடக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒரு முறை தசரதன் வேட்டையாடச் சென்றபோது, தடாகம் ஒன்றில் தண்ணீர் முகந்து செல்ல வந்திருந்த சிறுவன் சிரவணகுமாரன் என்பவன் மீது, தெரியாமல் அம்பு எய்திவிட்டான்.

கமண்டலத்தில் தண்ணீர் முகந்த சப்தம், யானை தண்ணீர் குடிப்பது போலக் கேட்டது. அதனால் தூரத்திலிருந்து தசரதன் எய்த சப்தவேதி என்ற பாணம், ஒலி வந்த திக்கை நோக்கிச் சென்று, சிறுவன் உயிரைப் போக்கிவிட்டது.

உயிர் துறக்குமுன் அந்தச் சிறுவன் வேண்டிக்கொண்டது போல, அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு, கண்ணில்லாத அவனுடைய வயோதிகத் தாய் -தந்தையிடம் சென்று, நடந்ததைக் கூறினான் தசரதன்.

மகனை இழந்த துயரத்தில் அந்தப் பெற்றோர் தசரதனுக்குக் கடும் சாபமிட்டுவிட்டு, உயிர் துறந்தனர். எங்களைப் போலவே புத்திரனைப் பிரிந்து, அந்தச் சோகத்தில் நீ உயிர் துறப்பாய் என்பதே அந்தச் சாபம். தசரதன் உள்ளத்தைக் கரையான் போல் அரித்துக் கொண்டிருந்த சம்பவம் இது.

வேட்டைக்குச் சென்று திரும்பிய தசரதன், சொல்லவும் மெல்லவும் முடியாமல், கலங்கித் தவித்ததை தனது விவேகத்தால் ஊகித்த கைகேயி, தசரதனின் தேர்ப் பாகன், அந்தரங்கக் காவலன் ஆகியோரைக் கூப்பிட்டு, சாமர்த்தியமாக விசாரித்து, நடந்த உண்மைகளை ஓரளவு தெரிந்துகொண்டாள்;

சாபம் பற்றிய உண்மை தெரிந்து கைகேயி பதறினாள்; துடித்தாள். புத்திரன் எனப் பொதுப்படையாகவே குறிப்பிட்டதால், அது தசரதன் பெற்ற புதல்வர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், இதன் உண்மைகளை இன்னும் ஆராய்ந்து அறிய விரும்பினாள் கைகேயி.

அந்தரங்கமாக, ஆஸ்தான ஜோதிடர்களை அழைத்தாள். தசரதனின் ஜாதகத்தையும், குழந்தைகளின் ஜாதகத்தையும் கொடுத்து ஆராயச் சொன்னாள். பொதுவாக, விண்ணில் உள்ள கிரகங்களது அமைப்பின்படி, நாட்டின் நிலை குறித்தும் விளக்கப் பணித்தாள்.

அந்தக் கால கட்டத்தின்படி, கிரக நிலைப்படி, அயோத்தி சிம்மாசனத்தில் எவர் அமர்ந்தாலும், அவர்கள் சில நாட்களில் மரணம் அடைய நேரும் என ஜோதிடர்கள் கூறினார்கள்.

புத்திரனைப் பிரிந்து என்கிற சாபம் புத்திரன் இறந்து என்கிற அர்த்தத்தில் இடப்பட்டாலும், இது குறித்து சாஸ்திர விற்பன்னர்கள் மற்றொரு விளக்கமும் பரிகாரமும் சொன்னார்கள்.

ஒருவேளை, புத்திரன் தந்தையை விட்டு வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டால், அதனால் புத்திரன் உயிர் பிழைத்துவிடுவான்;

தந்தை மட்டும் அந்தப் பிரிவால் உயிர் துறக்க நேரிடும் எனும் விளக்கம், ஜோதிட பண்டிதர்களால் தரப்பட்டது. ஆக, தசரதன் உயிர் துறப்பது சாபத்தால் ஏற்பட்ட, தவிர்க்க முடியாத நியதி எனும் உண்மையை உணர்ந்தாள் கைகேயி.

அதே நேரம், மைந்தன் ஸ்ரீராமனையாவது காப்பாற்றியாக வேண்டும் என நினைத்தாள். மனைவியின் கடமையைவிட, தாய்மையின் அன்புதான் அங்கே தலை தூக்கி நின்றது.

ஸ்ரீராமனை மட்டும் தசரதனிடமிருந்து பிரிக்க நினைத்தால், அதற்குச் சரியான காரணம் காட்ட வேண்டுமே? அதற்காகத் தியாகமும் அன்பும் உருவான அந்தத் தாய், தன்னை இந்த உலகம் பேராசைப் பேய் என்று நிந்தித்தாலும் பரவாயில்லை என மனத்தை திடப்படுத்திக் கொண்டு, ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள்.

பரதனுக்கு முடிசூட்ட வேண்டினாள்; அதற்குத் தடையில்லாதபடி, ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்பச் சொல்வது போல் இருக்கட்டும் என முடிவு செய்தாள்.

அப்படியே வரமும் கேட்டாள். அது மட்டுமா? ஒருவேளை, சக்கரவர்த்தியாக தசரதனே தொடர்ந்து நீடித்தால், ஜோதிடப்படி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னன் உயிர் துறக்க நேரிடுமே? அதையும் எப்படியாவது தடுத்துவிட முடியாதா என ஏங்கினாள்.

எனவே, கணவனையும் ஸ்ரீராமனையும் காப்பதற்குத் தன் மகனைத் தியாகம் செய்யத் துணிந்தாள். ஆகவே, பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வலியுறுத்தினாள்.

பரதனுக்கு முடிசூட்டிவிடுகிறேன். ஆனால், ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டாமே எனக் கெஞ்சினான் தசரதன்.

ஆனால், கைகேயியோ பிடிவாதமாக இருந்தாள். ஸ்ரீராமன், அவளுக்கு மட்டும் குழந்தை அல்ல; அயோத்தியின் குழந்தை. அவன் அவதாரப் பணி நிறைவேற வேண்டும்.

ராவணனைப் போன்ற அரக்கர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவன் ஸ்ரீராமன்! ஆகவே, அவன் காக்கப்பட வேண்டும். எனவே, விதிப்படி தனக்கு இடப்பட்ட பணியைச் செய்தாள் கைகேயி.

பாவி கைகேயி சதி செய்து விட்டாளே! என்று எல்லோரும் அவளை நிந்தித்தனர். சீதையும் லட்சுமணனும் பின் தொடர, மரவுரி தரித்து, அயோத்தியை விட்டு ஸ்ரீராமன் தவக் கோலத்தில் கானகம் புறப்பட்டான்.

அவனைக் காட்டில் விட்டுவர, ஒரு ரதம் புறப்பட்டது. அந்த ரதம், வீதியில் நகர முடியாதபடி மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு, அழுது புலம்பியது. ஊரே அழுது கொண்டிருந்தது.

ஒருத்தியின் மனதில் மட்டும் ஸ்ரீராமனைக் காப்பாற்றிவிட்ட பெருமிதம் நிலைத்திருந்தது.

அவள் கண்களிலிருந்தும் கண்ணீர் சிந்தியது. அது ராமனுக்காக அல்ல; புத்திர சோகத்தால் உயிர் நீத்து, தன்னை நிரந்தரமாகப் பிரியப் போகும் கணவன் தசரதனுக்காக!

ஸ்ரீராமன், அவதாரப் பணியைத் தொடங்கி விட்டான்; ராவணன் அழிவான்; துயர் தீரும் நேரம் வந்துவிட்டது என தேவர்களெல்லாம் பூமாரிப் பொழிந்தனர்.

அரக்கர்கள் அழிந்து, ராமனால் நல்லோர் காக்கப்படுவர் என்பதால், அவனைக் காட்டுக்கு அனுப்பிய கைகேயியை அவர்கள் மனதார, மானசிகமாக வாழ்த்தினர்.

ஊரார் பழித்தனர்; உலகோர் நிந்தித்தனர்; பெற்ற மகன் பரதனோ, தாயின் தியாகம் தெரியாமல், அவளை வெறுத்தான். ஏசினான்.

ஆனால் ஸ்ரீராமனுக்கு மட்டும் தன் அன்புத் தாய் கைகேயி செய்த தியாகம் தெரியும். ஆரண்ய முனிவர்களுக்கெல்லாம் அவள் பெருமை தெரியும். தேவர்களுக்கெல்லாம் அவள் செய்த உதவி புரியும்!
 Thanks to Indra srinivasan

Thursday, February 27, 2014

Panguni Brahmautsavam at Mannargudi 2014

This year (2014) Panguni Brahmautsavam at Mannargudi is to be commenced from March 17, 2014 Mirchangrahanam, March 18, 2014 Nagarasodhanai and from March 19, 2014 Thuvajarohanam and then for 18 days upto 05.04.2014 continuously Perumal Morning Pallaku purapadu at 8.00 am and then proceed to Vahana Mandapam situated at 5kms away from Temple. From Vahana Mandapam evening 8.00 pm purapadu at Vahaham daily and reach temple between 1 to 3 midnight. From 06.04.2014 onwards 11 days Vidayatri Utsavam. Thus totally 30 days Utsavam from only Mannargudi Temple.

Wednesday, February 26, 2014

பார் ஆண்ட பாதுகை

தன்னுடைய தாத்தா வீட்டில் பரதன் ஏதோ கவலையுடனேயே இருந்தான். மனைவி மாண்டவி அவன் முகத்தில் ஓடும் வேதனை ரேகைகளைப் பார்த்தாள்.

அவன் உள்ளத்தில் அலையாகப் புரண்டு, புரண்டு அவனை அலைக்கழிக்கும் சோக சிந்தனை என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளவும், அதற்குத் தன்னால் ஏதேனும் உதவி செய்ய முடியுமாவெனவும் அவள் யோசித்தாள்.

“அயோத்தியில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமென என் உள்ளுணர்வு சொல்கிறது,”பரதன் குரலில் கவலை.

“அயோத்தியில் அசம்பாவிதமா..?” -சற்றே நகைத்தபடி கேட்டாள், மாண்டவி. “தங்கள் தந்தையார் தசரத சக்கரவர்த்தியின் ஆட்சி அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதோடு, தங்கள் அருமை தமையனார் ராமன், தந்தைக்கு ராஜ பரிபாலனத்தில் உறுதுணையாக இருக்கிறார். இவர்களை மீறி அசம்பாவிதம் ஏதேனும் நடைபெற்று விடமுடியுமா அங்கே?”
“உண்மைதான்,”

சற்றே ஆறுதலடைய முற்பட்டான் பரதன். ஆனாலும், அவன் மனம் மிகவும் சஞ்சலப்பட்டுக் கிடந்தது. “எதுவானாலும் சரி, நாம் இப்போதே அயோத்திக்குச் செல்ல வேண்டும்...”-அவன் தன் தாத்தா நாடான கைகேயத்தை விட்டுப் புறப்படத் தயாரானான்.

மாண்டவியும் அப்போதே அவனுடைய எண்ணத்தை செயல்படுத்தத் துவங்கினாள். மாண்டவிக்கு பரதனுடைய மனக் குழப்பம் தேவையற்றது என்றுதான் தோன்றியது. ஆனாலும், அதை சாதாரணமா எடுத்துக் கொள்ளவோ, மாற்று யோசனை சொல்லவோ அவள் தயங்கினாள்.

அதே நேரம் ஒரு தகவல் வந்தது. அதிர்ச்சியூட்டிய தகவல். ‘‘அயோத்தியைத் துறந்து ராமன் காட்டிற்குப் போகிறான். அவ்வாறு அவரைக் காட்டிற்கு விரட்டியது வேறு யாருமல்ல, பரதனின் தாயான கைகேயிதான்! ராமனைப் பிரிய இயலாத சோகத்தில் தசரதன் உயிர் நீத்தார்...’’

உடலெங்கும் பதறியது பரதனுக்கு. ‘‘என்னக் கொடுமை இது! அருமை அண்ணன் ராமன் காட்டிற்குப் போவதா?

காட்டிலுள்ள கொடிய விலங்குகளும், அங்கே தவமியற்றும் ஞானிகளும் ராமனை முன்னிட்டுத் தாங்களும் அயோத்தியில் வாழ விரும்பும்போது, அத்தகைய அமைதிப் பூங்காவான அயோத்தியை விட்டு, அதற்குக் காரணமான ராமன் நீங்கினானா? அதற்குத் தன் தாய்தான் காரணமா? சிறிதும் முறையில்லையே இது...’’

‘’அது மட்டுமல்ல,’’செய்தி தாங்கி வந்தவன் கூடுதல் தகவல் தந்தான். ‘‘ராமன் விட்டுச் சென்ற, சக்கரவர்த்தி தசரதன் அமர்ந்த சிம்மாசனத்தை பரதன் அலங்கரிக்க வேண்டும்!’’

அவ்வளவுதான். கொதித்தெழுந்தான் பரதன். ‘‘யாரைக் கேட்டு எடுக்கப்பட்ட முடிவு இது? முறைப்படி தந்தைக்குப் பிறகு மூத்த தனயன்தான் அரியணை ஏறவேண்டும்.

அண்ணன் இருக்கும்போது தம்பி அந்தப் பதவியைப் பறிப்பது எந்த உலக நியாயம்? இதை அயோத்தி மக்கள்தான் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அயோத்தியின் அரசவை எப்படி ஒப்புதல் கொடுத்தது..?’’

புயலாகப் புறப்பட்டான் பரதன். அதே வேகத்தில், தொடர்ந்து செல்லும் சருகாக மனைவி மாண்டவி.

அயோத்தியில் நிலை கொண்டது அந்தப் புயல். அரண்மனையே அந்த உக்கிரத்தில் கிடுகிடுத்தது.

சம்பிரதாயங்களையெல்லாம் மீறி, தாய் கைகேயியின் மாளிகைக்குச் சென்றான் பரதன். இந்தச் சூழலை எதிர்பார்த்தவள்போல, கைகேயி அமைதியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அந்தப் பார்வையில் ராஜாங்க இறுமாப்பு இருந்ததை பரதன் கவனித்தான். பரம்பரை அரச திமிர் மிளிர்ந்ததைக் கண்டான். அந்த ஆணவம்தான் எளிமையான குடும்பத்திலிருந்து வந்த கோசலையையும், அவரது மகனான ராமனையும் துச்சமாக நினைக்கத் தோன்றியதா?

இதற்குத் தந்தையாரும் எப்படி உடன்பட்டார்? ஒரு பலவீனமான கட்டத்தில், ஒரு போரில் தன் வெற்றிக்குக் காரணமாக இருந்த பிரமிப்பில் இரண்டு வரங்களை தன் மனைவியான கைகேயிக்கு அவர் அளித்திருக்கலாம். ஆனால், அந்த வரங்கள் இப்படி முறைகேடாகப் பயன்படுத்தப்படும்போது அவர் ஏன் மறுதலிக்கவில்லை?

வாக்குக் கொடுத்துவிட்ட நாணயம் அவரைக் கட்டிப் போட்டுவிட்டதா? அவர் மன்றாடிக் கேட்டும் தாயார் மனம் இளகவில்லையாமே! அந்த அளவுக்கு அண்ணல் ராமன் மீது கைகேயிக்கு வெறுப்பு எப்படி வளர்ந்தது? பிறந்து, வளர்ந்து, எங்களுக்குத் திருமணமும் ஆன பிறகும் ராமனையே பிற மூன்று தம்பிகளுக்கும் உதாரண புருஷனாக அடையாளம் காட்டி வந்த அன்னைக்கு திடீரென எப்படி இவ்வாறு புத்தி பேதலித்துப் போயிற்று?

இப்படி அதிரடி வரம் கோரும் அவசியம் அன்னைக்கு ஏன் வந்தது? ராமனைப் பிரிந்ததால் தான் தசரதனின் உயிர் பிரிந்தது என்பதை அவள் உளமாற உணர்கிறாளா?

அதற்கான வருத்த சாயல் எதுவும் அவள் முகத்தில் நிழலாடவில்லையே!

மாண்டவி தன் கணவனுடைய உள்ளத்தைப் படித்தாள். அதில் உருவான வெப்பம் அகிலத்தையே தகிக்குமோவென பயந்தாள். மெல்ல அவனுடைய கரம் தொட்டாள். அது அவனுடைய உக்கிரத்தை அதிகப்படுத்தியதே தவிர, சிறிதளவும் குறைக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணம், கைகேயி எந்த உணர்வையும் காட்டாமல், இறுகிய முகத்தவளாய், தன் எண்ணம் ஈடேறிய நிறைவினளாய் காட்சி தந்ததுதான்.

தாயிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தான் பரதன். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்தானே? தான் பெரிதும் நேசித்த, தனக்கு உதாரண புருஷனாகத் தான் கருதிய ராமனை, எந்தத் தாய் காட்டிற்கு விரட்டியடித்தாளோ, அந்தத் தாயின் கண் முன்னாலேயே இதே அரியாசனத்தில் ராமனை அமர்த்தி நான் அழகு பார்க்கிறேன்.

ராமன் கானகம் ஏக வேண்டும், நான் அரசாள வேண்டும் என்ற உன் இரு வரங்களும் அப்போது பொய்த்துதானே போகும்? அப்படி நிறைவேறாத வரங்களை மீண்டும் மீட்க கைகேயி, தசரதனை எங்கே போய்த் தேடுவாள்?

வரம் கேட்டவளும், அளித்தவரும் இருவருமே நிறைவேற்ற முடியாதபடி, அந்த வரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு நடந்து கொண்டால் என்னவாகும்?

உடனே தன் அரச உடையை துறந்தான் பரதன். தானும் மரவுறி தரித்தான். காட்டை நோக்கிப் புறப்பட்டான். கைகேயியின் பார்வையில் ஒளிர்ந்த அர்த்தத்தை, பரதன் தன் கோணத்தில் எதிர்மறையாகவே புரிந்து கொண்டான்.

‘ராமன் வரமாட்டான். நீ ஏமாறப் போகிறாய்’ என்று எகத்தாளமாகத் தெரிந்தது அவனுக்கு. ஆனால், பிற எல்லோருக்குமே பரதன் அவ்வாறு கானகம் செல்வதில் ஆவல் பொங்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பரதன், ராமனை அயோத்திக்கு அழைத்து வந்துவிடுவான்! அதனாலேயே அவனை தடுப்பவர் யாருமில்லை.

காட்டில் சிறிது தூரம் சென்றவுடனேயே கால் நொந்தது பரதனுக்கு. தன்னைச் சுற்றிலும் அரசப் பரிவாரங்கள் இருந்தாலும், குதிரை, யானை, பல்லக்கு என்ற எந்த வாகன சௌகரியத்தையும் ஏற்காமல், அண்ணன் எவ்வாறு கால் நோக நடந்திருப்பானோ அதே மாதிரி தானும் செல்லவே அவன் விரும்பினான்.

அது மட்டுமல்ல, அண்ணல் பாதம் பதிந்த தரையில், தன் பாதுகை படக்கூடாது என்று கருதிய அவன் வெற்றுப் பாதங்களாலேயே வனத்தில் நடந்தான். ‘‘ராம், ராம், ராம்...’’என்று மந்திரமாக அண்ணன் திருநாமத்தை அவன் ஜபிக்க, கூடி வந்தவர்கள் அனைவரும் அதனைப் பின் மொழிந்தனர்.

தூரத்தே புரண்டெழுந்த புழுதியைக் கண்ட லட்சுமணன் திடுக்கிட்டான். பெருங் கூட்டமாய் வருபவர்கள் யார்? பகைவர்களோ? அண்ணனை எதிர்க்க வந்த அரக்கர்களோ? வெகுண்டெழுந்தான் அவன். வழக்கம்போல அவன் தோளைத் தொட்டு அமர்த்தினான் ராமன்.

“வருபவர்கள் யாராக இருக்கும் என்ற சந்தேகம் உன்னுடைய பிற புலன்களின் ஆற்றலை அப்படியே அமுக்கிவிட்டது, லட்சுமணா. எதையுமே எதிர்மறையாக சிந்திப்பதால் புலன்களும் பொய் சொல்லத் துவங்கிவிடும்.

பார்ப்பது, கேட்பது, நுகர்வது, பேசுவது, மெய் உணர்வது எல்லாமே தவறானதாகிவிடும். இந்தக் கூட்டத்தைப் பார்த்தாயே தவிர, அங்கிருந்து புறப்படும் ‘ராம’ ஜபத்தைக் கேட்டாயா? அந்தக் கூட்டம் நமக்கு எதிரானதல்ல, நம்மைச் சார்ந்ததுதான் என்பதைப் புரிந்துகொள்” என்றான் ராமன்.

“அப்படியானால்... அப்படியானால் வருபவர்கள் அயோத்தி மக்களா?” -லட்சுமணன் கேட்டான்.

“அவர்களும் வருகிறார்கள். அவர்களை தலைமை ஏற்று நடத்தி வருகிறவன் பரதன்!”-ராமன் அமைதியாகச் சொன்னான்.
அவ்வளவுதான். லட்சுமணன் துள்ளி குதித்தான். “பரதனா?

உங்களை அயோத்தியை விட்டு விரட்டியது போதாதென்று இப்போது காட்டிற்கும் துரத்தி வருகிறானா? நீங்கள் நிரந்தரமாக நாடு திரும்பவே கூடாது என்று நினைத்து அதை முயற்சிக்க வருகிறானோ?”என்று கோபமாகக் கேட்டான்.

அவனை ராமன் ஆசுவாசப்படுத்துவதற்குள், ராமனை தொலை தூரத்திலேயே பார்த்துவிட்ட பரதன் பசுவை நோக்கித் தாவும் கன்றுபோல ஓடோடிச் சென்று ராமன் பாதத்தில் வீழ்ந்தான்.

கண்களிலிருந்து கண்ணீர் மாலையாகப் பெருகி, ராமனின் பாதங்களை அர்ச்சித்தது. அவனை ஆதூரத்துடன் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டான் ராமன். “அன்னையர் மூவரும் நலமா..?”என்று அவன் ஆரம்பித்த போது, கண்ணீர் பெருக்கிய பரதனின் கண்கள் கோபத்தை அனலாகக் கொட்டின.

“நான் என் தாத்தாவின் நாட்டிற்குச் சென்றிருந்தபோது நடந்துவிட்ட கொடுமை இது. நான் அயோத்தியிலேயே இருந்திருந்தேனானால், இப்படி நடக்க விட்டிருக்கமாட்டேன்” -படபடப்புடன் பேசினான் பரதன்.

பரதன் ராமனை விரோதிக்க வரவில்லை என்பதைப் புரிந்து கொண்ட லட்சுமணன், “அதனால்தான் உன்னை கேகய நாட்டிற்கு அனுப்பிவிட்டு, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உன் தாயார் நம் அண்ணனுக்கு இப்படி ஒரு துரோகம் செய்துவிட்டார்” என்று தன் பங்குக்கு ஆதங்கத்தை வெளியிட்டான்.

இருவரையும் அணைத்துக் கொண்டான் ராமன். “அப்படிச் சொல்லாதீர்கள். பெரியவர்கள் சொல்வதிலும், செய்வதிலும் ஏதேனும் அர்த்தம் இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு, அதனால் தோன்றும் கற்பனைக்கேற்ப அவற்றை விதவிதமாக, பெரும்பாலும் தப்பாகவே புரிந்து கொள்கிறோம்.

அப்போதே அவற்றின் அர்த்தம் புரியாவிட்டாலும் சற்று பொறுத்திருந்தால், ஏற்படும் விளைவுகள் நன்மைகளாகவே அமைவதை அறிந்து கொள்ள முடியும்’’என்று ஆறுதலளிக்க முயன்றான்.

“உங்களுடைய இந்தப் பெருந்தன்மைதான், கெடுமதி படைத்தவர்களுக்கு சலுகையாக அமைந்து விடுகிறது,”பரதன் சொன்னான். “அமைதி காக்கும் உங்களுடைய உயர் பண்பைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு மேலும், மேலும் தீமையையே செய்யும் அக்கிரமக்காரர்களை எதிர்த்து நீங்கள் ஏன் சிறு குரல் கூட கொடுக்கக்கூடாது?”

“உலகினருக்குத் தீமை விளைவிக்கும் அரக்கர்களையும், அரக்க குணமுள்ள முரடர்களையும் தாங்கள் மாய்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறீர்கள். ஆனால், பாதிப்பு உங்களுக்கே என்னும் போது தாங்கள் அமைதியாகிவிடுகிறீர்கள். ஏன்?” -லட்சுமணன் பரதனின் கருத்துக்கு ஆதரவாகப் பேசினான்.

வழக்கம்போல ராமன் அமைதிப் புன்னகை பூத்தான். “கொடுங்கோன்மையை நான் எதிர்க்கிறேன். பொதுவாக மக்களை பாதிக்கும் அராஜகத்தை எதிர்க்கிறேன்.

ஆனால், எனக்கு நேர்ந்தது எதையும் நான் அப்படிக் கருதவில்லை. காரணம், நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்தத் ‘துன்பம்’ யாரோ மூன்றாம் மனிதரால் ஏற்பட்டதல்ல.

அது என் பெற்றோர் எனக்காக விதித்தது. அந்த ‘ஆணை’க்கு அடிபணிவது என் கடமை. அப்படித்தான் நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரையிலான எந்த நிகழ்வையும் நான் உணர்வுபூர்வமாக அணுகுவதில்லை.

முந்தின நாள் எனக்குப் பட்டாபிஷேகம் என்று சொல்லப்பட்டபோது நான் எந்த உணர்வோடு இருந்தேனோ அதே உணர்வோடுதான் நான் கானகம் செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டபோதும் இருந்தேன்.

அரியாசனத்தில் அமர்வதற்கும், கானகத்தில் மரத்தடியில் அமர்வதற்கும் எனக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம், பெரியவர்கள் சொல்லும் எந்த சொல்லும், செய்யும் எந்த செயலும் நம் நன்மைக்காகத்தான் என்பதை நான் பரிபூரணமாக நம்புவதுதான்...”

லட்சுமணனும் பரதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தன் எண்ணம் ஈடேறாதோ என்ற விரக்தி, பரதனின் மனதில் சிலந்தி வலையாய் படர்ந்தது.

தன் தாயிடம் சபதமிட்டு வந்திருக்கிறோமே, அது நிறைவேறாதா? ராஜ தோரணையுடன் விளங்க வேண்டிய ராமனை இப்படி பாதி உடல் வெளியே தெரியும்படி மரவுறி தரிக்கச் செய்த கொடுமைக்கு தண்டனை அளிக்க நினைத்தேனே அது முடியாதா?

வேளை தவறாமல் அறுசுவை உணவைப் புசித்து, உடல் ஆரோக்கியத்தைப் பேணி வந்த ராஜகுமாரன் இப்படி காட்டில் காயையும், கனியையும் உண்ண வேண்டிய அவலத்தை உண்டாக்கியதற்கு பதிலடி கொடுக்க விழைந்தேனே, அது ஈடேறுமா?

சாளரங்கள் வழியே இளந்தென்றல் வீசி தாலாட்ட, பஞ்சு மஞ்சத்தில் படுத்து, களைப்பு நீங்கிப் புத்துணர்வு பெறவேண்டிய சக்கரவர்த்தித் திருமகனை இப்படி கானகத்தில் அலையவிட்டு, மடித்து வைத்த தன் கையையே தலையணையாக்கிக் குடிலில் படுக்க வைத்த அக்கிரமத்துக்கு விடையளிக்க விரும்பிய தன் எண்ணம் செயல் வடிவம் பெறாதா?

“அண்ணா, யாருக்காக என் தாயார் வரங்களைக் கேட்டாளோ, அந்த நபர் - நானே... நேரில் வந்து கேட்கிறேன் என்றால் அந்த வரம் காலாவதியானதாகத்தானே அர்த்தம்?

நான் அரச பட்டத்தை ஏற்க வேண்டும் என்பதற்காக தங்களை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரிய வைத்தது அந்த வரம். ஆனால், இப்போது நானே அந்த பட்டத்தை ஏற்க மறுக்கிறேன். இப்படி ஒரு வரத்தால் பயனடைவதில் எனக்கு உடன்பாடில்லை.

உண்மையான வாரிசின் நியாயமான பதவி பறிக்கப்பட நானே காரணமாக இருக்க முடியாது, எனக்கு அதில் விருப்பமில்லை. என் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்.

என்னுடன் இப்போதே அயோத்திக்குத் திரும்புங்கள். ராஜ கிரீடம் சூடிக் கொள்ளுங்கள். அயோத்தி அரச குடும்பம் மட்டுமல்ல அயோத்தி மக்கள் அனைவரது விருப்பத்தையும் நிறைவேற்றுங்கள். கோசலை ராமன் ராஜா ராமனாக வேண்டும்...”மன்றாடிக் கேட்டான் பரதன்.

சுற்றியிருந்த அனைவரும் ராமனின் சம்மதமான தலையசைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

அவர்கள் அனைவரையும் பார்த்த ராமன், பரதனிடம் சொன்னான், “உன்னுடைய அன்பால் நான் கரைகிறேன் பரதா. மூத்தவனிருக்க இளையவன் அரச பட்டம் ஏற்பது பொருந்தாது என்ற உன் அரசியல் எனக்குப் புரிகிறது. ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பதும் அரசியலில் ஒரு அம்சம் என்பது உனக்குத் தெரியாதா என்ன?

பதினான்கு ஆண்டுகள் காட்டில் வசிப்பதாகவும், உன்னை தசரதனின் அரசியல் வாரிசாக ஆக்குவதற்கு சம்மதிப்பதாக வும் நான் கொடுத்த வாக்கு பொய்த்துவிடக்கூடாது, இல்லையா? உன் விருப்பத்தை நிறைவேற்ற நான் உன்னுடன் வருவதாகவே வைத்துக் கொள்வோம்.

அது தாயார் கைகேயிக்கு நான் செய்யும் வாக்கு துரோகம் என்பது மட்டுமல்ல, அவர்களை கேலி செய்வது போலவும் ஆகும். இப்போதைய உன் மனநிலைப்படி, அப்படி நான் நடந்து கொண்டால் நீ கைகேயியை உன் தாயார் என்றும் பாராமல் கேலி செய்து துன்புறுத்துவாய்.

உன்னைப் பார்த்து பிற எல்லோரும் அன்னையை கிண்டல் செய்து சொல்லம்புகளால் தாக்குவார்கள். ‘என்னாயிற்று உன் வரம்? யாருக்காக நீ வரம் கேட்டாயோ அந்த பரதனே இப்போது ராமனை அழைத்து வந்துவிட்டானே, இப்போது உன் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வாய்?’ என்றெல்லாம் கேட்டு வேதனைப்படுத்துவார்கள்.

ஒரு ராஜமாதங்கி, சக்கரவர்த்தினி இப்படி அவமானப்படுவது தகுமா? அதற்கு நீயும் நானும் காரணமாவது முறையா? உன் கோபம் பிற எல்லோருக்கும் வக்கர மனதைக் கொடுப்பது சரிதானா?

‘உன்னால் நல்லது எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தீயதைச் செய்யாமல் இரு’ என்பார்களே, அந்த கொள்கைப்படி நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டாமா?

ஒரு பாதிப்பு நிகழ்ந்துவிட்டது என்றால் அதற்கு மாற்று, அதற்குக் காரணமானவர்களை பாதிப்படைய வைப்பதா? உடலில் வலி ஏற்படச் செய்வதுதான் வன்முறை என்றில்லை, யாருடைய உள்ளத்திலும் வேதனை தோன்ற வைத்தால் அதுவும் வன்முறைதான். அதற்கு உன்னையும், உன் மூலமாக என்னையும் காரணமாக்கி விடாதே...”

ராமன் பேசப்பேச எல்லோருக்கும் அவன் மீதான அபிமானம் அதிகரித்தது. அதே சமயம் இத்தகைய உத்தம புருஷனை பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு அனுப்பிய கைகேயியின் மீதான வெறுப்பையும் அதிகரிக்க வைத்தது.

இவர்களில், ராமன் என்ற பெருந்தகையாளனை, தங்கள் தமையனை, கைகேயி வேதனைக் குள்ளாக்கியதை லட்சுமணனாலும், பரதனாலும் சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தன் முயற்சியில் தான் தோற்றுவிட்டாலும், தன் கொள்கையிலிருந்து மாறாதிருப்பதில் உறுதியானான் ராமன். தான் அயோத்திக்கு வரவே முடியாது என்று தீர்மானமாக தெரிவித்துவிட்டான்.

வேறு வழியில்லை. வெற்றுக் கையனாகத்தான் பரதன் திரும்ப வேண்டும். அங்கே கைகேயி காத்திருப்பாள். இளக்காரமாகப் புன்னகைப்பாள். ‘என்ன ஆச்சு?’என்று மடக்கிய கையில் விரல்களைப் பிரித்து எகத்தாளமாகக் கேட்பாள்.

அரசவையினரும், அயோத்தி மக்களும் அந்த கேலியில் பங்கு கொள்ளலாம். அந்த அவமானத்தை எப்படித் துடைப்பது? உள்ளம் சோர்வடைய, அதனால் உடலும் தொய்வடைய, அப்படியே ராமன் காலடியில் சரிந்தான் பரதன்.

தன் முகத்தை ராமனின் பாதத்தில் அழுந்தினான்... இதோ... ராமனின் பாதுகை. இதைக் கேட்கலாம். ராமனிடம் இதைக் கேட்கலாம்... மளமளவென்று மனசுக்குள் திட்டம் உருவானது.

“ராமா, நீங்கள்தான் வரவில்லை, தங்கள் பிரதிநிதியாக உங்கள் பாதுகையையாவது என்னுடன் அனுப்பி வைப்பீர்களா?”
-நா தழுதழுக்கக் கேட்டான் பரதன்.

உடனே வெகுண்டான் லட்சுமணன். “உன் தாயைவிட கொடுமைக்காரன் நீ. அவளாவது காட்டுக்கு அனுப்பியதோடு நின்றுவிட்டாள். நீ என்னடாவென்றால் அண்ணனின் பாதுகையைப் பறித்துக் கொண்டு, இந்த காட்டின் கல்லிலும், முள்ளிலும் பாதம் நோக அவரை நடக்க வைக்கத் துணிகிறாய்” என்று பரதன் மீது கோபம் கொண்டான்.

அவனை அமைதிப்படுத்தினான் ராமன். “பரதன் ஏமாற்றமடைய விரும்பவில்லை. பெருத்த எதிர்பார்ப்புடன் என்னை அயோத்திக்கு அழைத்துச் செல்ல நினைத்த அவன், தன் நோக்கம் ஓரளவாவது நிறைவேற வேண்டும் என்ற ஆதங்கத்தில் என் பாதுகைகளைக் கோருகிறான்.

அந்த கோரிக்கையை நிறைவேற்றி வைப்பது என் கடமை. அதோடு, நீயும், சீதையும் வெற்றுக் கால்களுடன் என்னுடன் வரும்போது நான் மட்டும் பாதுகை அணிந்திருப்பது எந்த வகையில் நியாயம்? எனக்கு இப்படி ஒரு படிப்பினையைக் கொடுத்த பரதனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்...” என்று உள்ளம் நெகிழ்ந்த ராமன் பாதுகைகளை விட்டு நீங்கினான்.

குனிந்து அந்தப் பாதங்களை எடுத்துக் கொண்ட பரதன் அவற்றைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். பிறகு லட்சுமணனை நெருங்கி, ‘‘என் தாய் கைகேயியை நான் பழிவாங்குவேன் லட்சுமணா.

இந்தப் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து, தினமும் பூஜித்து, இவை என் உள்ளுணர்வுக்கு அறிவுறுத்துவதையே நான் செயல்படுத்துவேன்.

எந்த அரியாசனத்தில் ராமன் அமரக்கூடாது; நான் அமர வேண்டும் என்று என் தாய் விரும்பினாளோ, அந்த அரியாசனத்தில் இதோ நம் அண்ணனின் பாதுகைகளை அமர வைக்கப் போகிறேன். அதைப் பார்த்து அவள் எவ்வளவு வேதனைப்படுவாள், புழுங்கித் தவிப்பாள்... அந்த தண்டனை அவளுக்குப் போதும்... சரிதானே?’’ என்று கேட்டான்.

லட்சுமணன் திருப்தியுடன், முக மலர்ச்சியுடன் தலையசைத்தான்.

அயோத்தி, ராம பாதுகா பட்டாபிஷேகம் கண்டது. பரதன் தன் மனைவியுடன் தினமும் அவற்றை வணங்கி வந்தான். கைகேயிக்குத் தகுந்த தண்டனை வழங்கிவிட்டதாக இறுமாந்தான் அவன். கைகேயி மட்டும் மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். அவளுக்குதானே தெரியும், ராமனை காட்டுக்கு அனுப்பியதற்கான காரணம்!


Thanks to Indra Srinivasan for sharing the post.

அனுமன் பெற்ற பரிசு! - முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யர்



கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா...' - திருப்பாவையின் 27-வது பாசுரத்தில் வரும் வரி இது.

சொன்னாலே நாக்கில் நீர் ஊறும் இந்த சர்க்கரைப் பொங்கல் பாசுரத்தில்... 'உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்' என்று பாடுகிறாள் ஆண்டாள்.

அதாவது, 'எதிர்த்துப் போராடுபவர்களை ஜெயிக்கக்கூடிய பரமாத்மாவான உன்னைப் பாடி நான் பெரும் பரிசு!' என்கிறாள் ஆண்டாள். அப்படி என்ன பரிசு... நாடு புகழும் பரிசு?!

ஊரெல்லாம் கொண்டாட, பலரின் முன்னிலையில் தரப்படும் பரிசு; எந்த அபிப்ராய பேதமும் இல்லாமல் எல்லோரும் ஆமோதிக்க, உயர்ந்த சபையில் அளிக்கப்படும் பரிசு! அப்படிப்பட்ட பரிசைப் பெற்றவர் யார்?

'எங்கே ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கே இருப்பேன்' என்று சொன்ன ஆஞ்சநேயன்தான்! அவனுக்குக் கிடைத்தது போன்ற பரிசு யாருக்குக் கிடைக்கும்?!

ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம். ஊரே திரண்டு நிற்க, கோலாகலமாக இருக்கிறது சாகேதபுரி. சீதாதேவி, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையை கையில் வைத்துக் கொண்டு யாருக்குத் தரலாம் என்று யோசித்தாள்!

'தேஜஸ், தைரியம், புகழ், திறமை, வல்லமை, அடக்கம், நீதி, ஆண்மை, பராக்கிரமம், அறிவு ஆகியவை எவரிடம் விளங்குகிறதோ அவருக்கு இந்த மாலையைக் கொடு!' என்றான் ராமபிரான்.

உடனே, முத்துமாலையை ஆஞ்சநேயனுக்கு வழங்கினாள் சீதாதேவி. பரமாத்மாவின் திருவுளமும் இதுவே!

'அடடா... இந்தப் பரிசுக்குத் தகுதி உடையவன் ஆஞ்சநேயனே' என்று அனைவரும் ஆமோதித்தனர். இதுதான் நாடு புகழும் பரிசு!

'ராமோ நாந்யத்ர கச்சதி' என்று ஸ்ரீராமனைத் தவிர, வேறு எவரையும் நினைக்காதவன் அனுமன்.

ராமாவதாரம் முடிந்து பரமாத்மா வைகுண்டத்துக்கு எழுந்தருளும்போது புல் - பூண்டு எல்லாவற்றுக்கும் மோட்சம் கொடுத்தான். 'வைகுண்டத்துக்கு வருகிறாயா?'' என்று அனுமனிடமும் கேட்டான்.

''வைகுண்டத்தில் ராமாயண உபந்யாசம் உண்டா?'' என்று பதில் கேள்வி கேட்டான் அனுமன். ''இல்லை'' என்று பரமாத்மா சொல்ல... ''அப்படியெனில், வைகுண்டம் எனக்கு வேண்டாம்'' என்றான் ஆஞ்சநேயன்.

ஆனந்தக் கண்ணீர் பொங்க அனுமனை அணைத்துக் கொண்டான் ஸ்ரீராமன். ''உன்னால் காடாலிங்கனம் பண்ணப்பட்ட இந்த சரீரத்தை விட்டு வைகுண்டம் வேண்டாம்!'' என்றான் ஆஞ்சநேயன்!

இப்போதும், ராமாயண ப்ரவசனம் நடக்கும் இடத்துக்கு ஆஞ்சநேயன் வருவதாக ஐதீகம். எனவே, மணைப் பலகை ஒன்று போட்டு, இரண்டு வாழைப்பழங்களை வைப்பார்கள். 'ராமா' என்று சொல்வதைக் கேட்க அப்படியோர் ஆசை மாருதிக்கு! ஆகவே அனுமனுக்கு பரிசு கொடுத்தால், கூடாது என யார்தான் மறுப்பார்கள்?!

ஒரு முறை, பத்ரிகாஸ்ரமத்தில் இருந்து தென்திசை நோக்கி யாத்திரை வந்தார் நாரதர். இதேபோல் அனுமன், தென்திசையில் இருந்து பத்ரிகாஸ்ரமத்துக்குச் சென்றான்.

ஆகாச மார்க்கமாகச் செல்லும்போது இருவரும் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டனர்.

இரண்டு பேரும் பண்டிதர்கள்; அவர்களது பேச்சில் உயர்ந்த விஷயங்களே நிறைந்திருந்தன. ''பத்ரிகாஸ்ரமம் போகிறேன்; என்னுடன் வாருங்கள்'' என்றான் அனுமன். அவரது வார்த்தையைத் தட்டமுடியாமல், நாரதரும் உடன் சென்றார்.

சமுத்திரத்துக்கு நடுவே ஓர் அழகான பட்டினத்தைக் கண்டனர். ''இதென்ன ஊர்?'' என்று கேட்டார் அனுமன். ''இதுதான் பலராமனின் ஊர்'' என்றார் நாரதர். உடனே கோபம் வந்தது மாருதிக்கு!

கதாயுதத்தை ஓங்கியபடி, ''யார் பலராமன்? என் ராமனைவிட பலமானவனா..? ஊருக்குள்
சென்று 'பல' சப்தத்தை இழக்க வேண்டும். அவன் பெயரில் 'பல' இருக்கக் கூடாது. இல்லையென்றால், ஊரே சமுத்திரத்தில் உருளும் என்று சொல்லுங்கள்!'' என்று கர்ஜித்தார்.

நாரதருக்கு பயம். வேறு வழியின்றி வாசுதேவனி டம் சென்றார். வாசுதேவனுடன், வைகுண்டத்தில் இருந்து வந்திருந்த கருடனும் இருந்தார்.

பரமாத்மாவிடம் நாரதர், ''தங்கள் அண்ணாவின் பெயரில் உள்ள 'பல' எனும் வார்த்தையை எடுத்துவிட வேண்டுமாம்! இல்லையெனில், ஊரையே சமுத்திரத்தில் உருட்டப் போவதாகச் சொல்கிறான் மாருதி'' என்றார் நடுங்கியபடி.

இதைக் கேட்டு கோபம் அடைந்த பலராமன் கலப்பையைத் தூக்கினார். கருடனோ, 'ஒரு குரங்கா இப்படிப் பேசுகிறது? உத்தரவிடுங்கள்... அவனைக் கட்டி இழுத்து வருகிறேன்'' என்றான். பரமாத்மாவும், சந்தோஷம் பொங்க உத்தரவு கொடுத்தார்.

ஆத்திரத்துடன் வந்த கருடனை, அப்படியே வாலால் சுழற்றி, கடல் நீரில் தோய்த்து எடுத்து வீசியெறிந்தார் அனுமன். இறக்கைகள் ஒடிந்த நிலையில், பகவானின் திருவடியில் வந்து விழுந்தான் கருடன்.

அவனிடம், ''என்ன கருடா... இறக்கைகள் ஒடிந்து விட்டனவா?! ஒரு குரங்கை உன்னால் கொண்டு வர முடியவில்லையே...'' என்றார் மாதவன். தலைகுனிந்து நின்றான் கருடன்.

அடுத்து, சைன்யத்தைத் திரட்டிக்கொண்டு ஆவேசத் துடன் சென்றார் பலராமர். அனுமன், தனது நீளமான வாலை நீட்ட, அதில் சிக்கித் தவித்தார் பலராமர்; அவரின் சைன்யம் சமுத்திரத்தில் தத்தளித்தது!

''வேறு வழியே இல்லை. அனுமனின் கோபத்தைத் தணிக்க ஒரே வழி... நான் ராமனாக மாறுகிறேன்; நீ லட்சுமணனாக மாறி விடு'' என்று பலராமனிடம் சொன்னார் பரமாத்மா.

''அப்படியே... சத்யபாமாவை சீதாவாக அழைத்து வாரும். ஸ்ரீராம பட்டாபிஷேக கோலத்தைக் காட்டினால், அனுமனின் கோபம் பறந்தோடி விடும்!'' என்று நாரதரிடம் சொன்னார் பகவான்.

அதன்படி பரமாத்மா, ஸ்ரீராமராக அமர்ந்திருக்க, பட்டாடை சலசலக்க ஆபரணங்கள் அணிந்தபடி சபைக்கு வந்தாள் சத்யபாமா.

தன் தர்மபத்தினியைக் கண்ட பரந்தாமன், ''எந்த ஊர் நாட்டியக்காரி இவள்? இங்கே அரங்கேற்றம் செய்ய வந்திருக்கிறாளோ?' என்று கேட்க, துக்கத்திலும் வெட்கத்திலும் உடைந்து போனாள் சத்யபாமா; உள்ளே ஓடிச் சென்று அழுதாள்!

நாரதரிடம் பரமாத்மா மெள்ள கண்ணசைக்க... புரிந்து கொண்ட நாரதரும் உள்ளே சென்று, ''சீதையாக வரச் சொன்னால் இப்படியா வருவது? திருமண தருணத்தில் இருந்த சீதையைப் பிடிக்காதாம் அனுமனுக்கு!

அசோகவனத்தில் சோகமாக இருந்த சீதையைத்தான் பிடிக்குமாம். ஆகவே, அந்தக் கோலத்தில் வா'' என்றார் நாரதர்.

இதைக் கேட்ட சத்யபாமா, ஆபரணங்களை கழற்றினாள்; தலையை விரித்துப் போட்டாள்; சேலைத் தலைப்பைக் கிழித்து முடிச்சுகளைப் போட்டுக் கொண்டு சபைக்கு வந்தாள்.

இப்போதும் பரமாத்மாவுக்கு திருப்தி இல்லை. ''சீதை அசோகவனத்திலும் நன்றாகத்தான் இருந்தாள். இப்படி, பத்ரகாளி போல் வருகிறாயே'' என்றார். இதையடுத்து ருக்மிணியே, சீதாதேவியாக வந்தாளாம்!

உடனே கருடனை அழைத்த பரமாத்மா, ''உன் முதுகில் அனுமனை ஏற்றி வா!'' என்றார். அனுமனும் அவனது வாலும் நினைவுக்கு வர... கருடன் மறுத்தான்.

''நான் சொன்னதாகச் சொல்லி அழைத்து வா'' என்றார் பரமாத்மா. அதன்படி, அனுமனை சந்தித்து விவரம் சொன்னான் கருடன்.

அத்துடன் பகவான், பட்டாபிஷேகக் கோலத்தில் உள்ள விவரத்தையும் தெரிவித்தான். இதையடுத்து கருடனின் மேல் ஏறி வந்தான் மாருதி!

ராமாவதாரத்தில் கிடைத்த பரிசு - முத்துமாலை! இப்போது, தனது வாகனத்தையே கொடுத்து... பெரிய திருவடி மீது சிறிய திருவடி பவனி வரும் அழகை துவாரகையில் இருந்தபடி ரசித்தார் பரமாத்மா!

ஆனாலும் திருப்தியில்லை அவருக்கு! அனுமன் செய்த உபகாரத்துக்கு எல்லையே இல்லையே! பிறகு... ஸ்ரீராமனாக, அடுத்து கிருஷ்ணனாக, இதையடுத்து சேஷ சயனத்தில் லட்சுமியுடன் நாராயணனாக... மாறி மாறி காட்சி கொடுத்தார் பரமாத்மா!

இதில் ஒரு விஷயம்... கிருஷ்ணனாகவும் நாராயணனாகவும் அவர் காட்சி தந்த போது, சட்டென்று கண்ணை மூடிக் கொண்ட மாருதி, ஸ்ரீராமராகக் காட்சி தரும் போது மட்டும் கண்களை அகல விரித்து ஆனந்தமாக ஸேவித்தான்!

அதாவது ராமரைத் தவிர அனுமனின் மனம் வேறு எங்கும், வேறு எவரிடமும் செல்லாது! அதனால்தான் பெறற்கரிய பரிசு பெற்றான்!

Thanks to Indra Srinivasan for sharing  this post.

Thirukannapuram Masi Magam utsavam 2014 - 2nd part photos


thiruvirutham ghosti on 5th day morning


thanga palakku on 5th day morning


5th day night surya and chandra prabhai


6th day morning periya thiruvandhadhi sevai

  
perumal in savari paagai kondai
yaanai vaganam on 6th day night


6th day night periya thiruvandhdhi ghosti 
maalai maatral in thaayar sannadhi

 7th day mornin madal ghosti on procession of tiruther
perumal in tiruther
tiruther ghosti followed by koil thirumozhi

coming from tiruther


7th day night punnai mara vaganam

8th day tirumozhi continuation

8th day vennai thaazhi kannan


 8th day evening kudhirai vaganam


tirumozhi continuation

 9th day morning 3.15 maasi maga purappadu from temple


 garuda sevai in vellai mandapam


purappadu from vellai mandapam to beach
perumal inside the pavazhakkal chappram
tirumarugal varadharaja perumal joining for theerthavari
chakrathaazhwaar tirumanjanam and ready for the theerthavari
theerhtam coming for tirumanjanam

10th day dwadasa aaradhanam in ramar sannidhi

10 th day nite uthpalavathakka vimanam


Special Thanks to Venkata Varadhan Tirukannapuram Arayar swami for the photos.